blog title

வியாழன், 6 செப்டம்பர், 2012

சிறியா நங்கை - மருத்துவ பயன்கள்

சிறியா நங்கை - மருத்துவ பயன்கள் 





சிறிய நங்கை பெரிய நங்கை இலைகள் எப்படி இருக்கும்? நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்து என்று படித்துள்ளேன். அதை எப்படி பயன்படுத்துவது?
Top of Form

Bottom of Form
Top of Form
சிறியா நங்கையின் மருத்துவ பயன்கள் :
Bottom of Form
Top of Form

Bottom of Form
Top of Form
சிறியாநங் கைத்தழையைச் சேவித்த பேரைப்
பிரியார் மடந்தையர்கள் பின்னும் அறியதில்
டங்கனமும் நீறும் தனியழகு முண்டாகும்
திங்கள் முக மாதே தெளி
                                            மூலிகை குணபாடம் 
இதன் இலையை அரைத்து ஒரு கொட்டைப் பாக்களவு எடுத்து பாலுடன் கலந்து காலையில் உட் கொள்ள உடல் வலுக்கும்,இவர்களைப் பெண்கள் இச்சை கொள்வர்.

இதன் இலையை உலர்த்திப் பொடித்து அதே அளவு சர்க்கரை கூட்டி காலை,மாலை இரு வேளையும் 2 -முதல் 4 - கிராம் வரை உட்கொண்டு வர உடல் வலுக்கும் ,அழகு பெரும்.

பாம்பு கடிக்கு இதன் இலையை க் கசப்புச் சுவை தோன்றும் வரை தின்னும்படி கொடுத்து வர கடி நஞ்சு நீங்கும் .

வெண்காரத்தை இதன் இலைச் சாற்றில் அரைத்து புடமிட நீறும் .(பற்பமாகும்) 

சர்க்கரை நோய்க்கு அனுபவ முறை :

சிரியா நங்கை இலைப் பொடி - நெல்லி முள்ளிப் பொடி - நாவல்கொட்டைப் பொடி - வெந்தயப் பொடி - சிறு குறிஞ்சான் இலைப் பொடி இவை ஐந்து வகைகளையும் ஒரே எடை அளவு சேர்த்து கலந்து கொள்ளவும்.
இதனை காலை - மாலை ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து ஒரு தம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வர சர்க்கரை நோய் படிப்படியாக குறைந்து கட்டுக்குள் வரும்.

நன்றி !

Dr.அரவின் தீபன்...
சித்த மருத்துவம் கேள்வி - பதில் குழு (face book)
aravindeepan@gmail.com 

Bottom of Form

புதன், 5 செப்டம்பர், 2012

முகப் பரு - கரும் புள்ளி -தழும்புகள் நீங்க :ஆண்களுக்கும்

முகப் பரு - கரும் புள்ளி -தழும்புகள்  நீங்க : ஆண்களுக்கும் 






உடம்பில் உஷ்ணம் ஏறி..அதனால், முகத்தில் உஷ்ண கட்டி வந்து
பிறகு அது பழுத்து உடைந்த பிறகு, கட்டியின் தழும்பு மட்டும்
தென்படுமே.. அந்த தழும்பு மறைய என்ன செய்யலாம்?
Top of Form

முகத்தில் பரு வந்தால் அதனைக் கிள்ளக் கூடாது
நகம் படக்கூடாது ஏனென்றால் அதுவே பரு மறைந்த
பிறகு கருப்பு தழும்பாக மாறி விடும் .இதே போல்

அம்மை நோய்,மற்றும் சூட்டுக் கொப்புளங்கள் முகத்
தில் வந்தாலும் சிலருக்கு முகத்தில் தழும்பு நீண்ட
நாட்களுக்கும் அப்படியே இருக்கும்.

இதற்கான சித்த மருத்துவ முறை தீர்வுகள் : 

1 - முகப் பருவைக் கிள்ளுவதால் ஏற்படும் கரும்புள்ளி
    யைப் போக்க ஜாதிக்காய் ஒன்றை எடுத்து தேங்காய்ப்
    பால் சிறிது விட்டு அரைத்து இரவில் கரும் புள்ளியின்
    மேல் போட்டு வரவும் .

    தினமும் இது போல் செய்து வர சில நாட்களில் கரும்
   புள்ளி மறைந்து விடும்.

2 -
முகப் பரு - கரும் புள்ளி -தழும்புகள்  நீங்க :
    1 - கோபி சந்தனம் - ஒரு டீ ஸ்பூன் அளவு 
    2 - பாதாம் பருப்பு - மூன்று (நீரில் ஊற வைத்தது)
    3 - தயிர் - 2 - டீ ஸ்பூன்
    4 - எலுமிச்சை சாறு - 2 - டீ ஸ்பூன்
   இவைகளை அரைத்து எடுத்து முகம்,கழுத்து பகுதி
   களில் பூசி ஒருமணி நேரம் கழித்து கழுவவும்.

   இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்து வர முகப்
   பரு ,கரும்புள்ளி ,தழும்புகள் நீங்கி முகம் அழகு
   பெரும்.

3 -
முகத்தில் தழும்புகள் - தீப்புண் தழும்புகள் மறைய :
    அரச மர பழுப்பு இலைகளை சேகரித்து எரித்து கரி
    யாக்கி தூள் செய்து தேங்கா எண்ணையில் விட்டு
    குழப்பி வைத்துக் கொள்ளவும்.
    இதனை இரவில் தழும்பு உள்ள இடங்களில் தடவி
    வர தழும்புகள் படிப்படியாக மறையும்.

நன்றி !

Dr.அரவின் தீபன்...
சித்த மருத்துவம் கேள்வி -பதில் குழு (face book)  
Bottom of Form



சனி, 1 செப்டம்பர், 2012

மெலிந்த உடல் பருக்க - தந்த ரோகம் - பல்பொடி -

மெலிந்த உடல் பருக்க -



தந்த ரோகம் - பல்பொடி -


மெலிந்த உடல் பருக்க -

இளைத்தவனுக்கு எள்ளு - கொழுத்தவனுக்கு கொள்ளு என்பது சித்தர் மொழி யாகும்.உடலில் சதைப் பற்று இல்லாமல் மெலிந்தவர்க்கு ஒரு எளிமையான முறையின் மூலம் உடலை பருக்கச்செய்ய வழிமுறை உள்ளது.

மெலிந்த உடல் பருக்க "கருப்பு எள்"தினமும் -10 -கிராம் வீதம் வறுத்துச் சாப்பிட்டு உடனே குளிர்ந்த நீர் ஒரு தம்ளர் அருந்தவும்.இதே போல் -40-நாள் தொடர்ந்து உட்கொள்ள வேண்டும்.மெலிந்த உடல் பருக்கும்.
இதனை உட்கொள்ளும் போது உடலின் வெப்பம் அதிகரித்தால் பால் அருந்த வேண்டும்.இதனைப் பெண்கள் பயன் படுத்தக் கூடாது . 

 தந்த ரோகம் - பல்பொடி -

அனைத்து விதமான பல் சம்பந்தமான நோய்களை வரவிடாமல் தடுக்கும் ஒரு சித்த மருத்துவ அனுபவ முறை பல்பொடி செய்முறை .

1 - சுக்கு 
2 - காசுக்கட்டி 
3 - கடுக்காய் 
4 - இந்துப்பு 

இந்த நான்கு சரக்கும் ஒரே எடை அளவு எடுத்து இடித்து போடி செய்யவும். இதனைக் கொண்டு தினமும் பல் துலக்கி வர பல் ஈறுகளில் இரத்தம் கசிதல்,பல் ஆட்டம்,பல் சொத்தை,இவை அனைத்தும் நீங்கும்.
இதனைக்கொண்டு காலை,மாலை, தினமும் இருமுறை பல் துலக்கி வர பல் நோய்களே வராது.

நன்றி !
Dr.அரவின் தீபன்...
சித்த மருத்துவ கேள்வி பதில் -குழு (facebook)