blog title

வியாழன், 11 ஜூலை, 2013

அக்கிநோய் குணமாக சித்த மருத்துவம்

அக்கிநோய் குணமாக சித்த மருத்துவம்



அக்கிநோய் குணமாக சித்த மருத்துவம்

Mg Mgm
//அக்கி என்று சொல்லபடும் இந்த படத்தில் உள்ளவைகள் போன்று எனது முதுகு மற்றும் வயிற்றில் படர்ந்துள்ளது தக்க மருத்துவம் அறிந்தவர்கள் சொல்லுங்களேன்...//

வெயில் காலங்களில் தாக்கும் நோய்களில் ஒன்றுதான் அக்கி நோய் ஆகும்.இதுவும் அம்மை நோயினைப் போன்று வைரஸ் கிருமிகளால் வருவதுதான்.

ஆனால் அக்கிநோய் என்பது புதிதாக வருவதல்ல அம்மை நோய் முன்பு தாக்கியவர்களிடம்தான் இந்நோய் வருகின்றது.அம்மை நோய் வந்து போன பிறகு இந்த வைரஸ் கிருமிகள் முழுமையாக நீங்கி விடுவதில்லை.

சில அம்மை வைரஸ் கிருமிகள் உடலில் தங்கி விடும்.இவை பல வருடங்க ளுக்குப் பிறகு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது வெளி வந்து அக்கி நோய் ஆக தோன்றும்.

இந்த நோய்க்கு கிராமங்களில் மண் பாண்டம் செய்யும் குயவர்களிடம் செல்வார்கள்.அவர்கள் காவி மண்ணினால் அக்கி நோய் கண்டவரின்
காளி அம்மன் போன்று உருவம் உடலில் வரைந்து மந்திரம் செபித்து அனுப்பி விடுவார்கள். வலியும்,வேதனையும் நீங்கி குணமடைவர். 

அக்கி நோய்க்கு சித்த மருத்துவ முறையில் அனுபவ முறை தீர்வுகள்.

மருந்து - 1
நாட்டு மருந்து கடைகளில் பூங்காவி எனக் கேட்டால் கொடுப்பார்கள். அதனுடன் பன்னீர் வாங்கி வந்து பூங்காவி பொடியை துணியில் வைத்து சளித்து எடுத்து பன்னீர் சேர்த்து குழைத்து அக்கி உள்ள இடங்களில் பூசவும். எரிச்சல்,வலி, வேதனை குறையும்.

மருந்து - 2
ஊமத்தை இலை பறித்து வந்து அரைத்து அதனுடன் வெண்ணை சேர்த்து கலந்து அக்கியின் மேல் பூசவும்.கொப்புளங்கள் அடங்கும்.எரிச்சல்,வலி குறையும்.தொடர்ந்து ஒரு வாரம் போட்டு வரவும்.

உணவில் காரம்,உப்பு,குறைக்கவும்.குளிர்ச்சியான உணவுகள் உண்ணவும். வெயிலில் அலையக்கூடாது,

மருந்து - 3
சித்தா மருந்து கடைகளில் கிடைக்கும் குங்கிலிய பற்பம் 10-கிராம் வாங்கி அதில் ஒரு மொச்சை அளவு எடுத்து வெண்ணையில் [எலுமிச்சை]அளவு கலந்து காலை மாலை உண்ணவும்.7-நாள் தொடர்ந்து மருந்தை உண்ணவும். அக்கி குணமாகும்.

நன்றி !
Dr.அரவின் தீபன்...
நிர்வாகி
சித்த மருத்துவம் கேள்வி பதில் குழு - face book
http://siththamaruththuvavilakkam.blogspot.in/


Top of Form
                    
·                     https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-ash4/s32x32/275025_100005212479435_1969936646_q.jpg
Karthik Keyan Good information
·                     https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-ash3/s32x32/276087_100000242130122_815410059_q.jpg
Mg Mgm ஆலோசனைகளுக்கு மிக்க நன்றி கடைபிடிக்க தொடங்குகின்றேன்
·                     https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-prn1/s32x32/157358_100000232890080_1936315913_q.jpg
Samy Gopal தேவையான நேரத்தில் கிடைத்த குறிப்பு !
·                     https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-ash3/s32x32/276087_100000242130122_815410059_q.jpg
Mg Mgm நன்றாக குணமாகி தலைக்கு குளித்து விட்டேன் ஆலோசனைக்கு மிக்க நன்றி


மெலிந்தவர் பருமனாக சித்த மருத்துவ முறை விளக்கம்

மெலிந்தவர் பருமனாக சித்த மருத்துவ முறை விளக்கம் 



மெலிந்தவர் பருமனாக சித்த மருத்துவ முறை விளக்கம் 

//Sir udambu kundaga ethavathu tips thanga sir pls my age is 19//


உடலில் உஷ்ணம் மிகுந்து இருப்பதாலும்,உடலுக்குத் தேவையான புரத சத்துக்கள் கிடைக்காததாலும்,உடல் மெலிந்து இருப்பதற்கு காரணங்களாகும்.    


சித்த மருத்துவ முறைகளில் இளைத்த உடல் பருக்கவும்,
பருத்த உடல் இளைக்கவும் ஏராளமான முறைகள் உண்டு.


இளைத்தவனுக்கு  எள்ளு,
கொழுத்தவனுக்கு  கொள்ளு

என்பது மருத்துவ பழமொழியாகும்.இதன் விளக்கம் என்ன வென்றால் உடலில் சதைப்பிடிப்பு இல்லாமால் மெலிந்து இருப்பவர்கள் தினமும் இரவில் ஒரு கைபிடி அளவு எள்ளு எடுத்து சிறிது,சிறிதாக வாயிலிட்டு நன்கு மென்று தின்று ஒரு தம்ளர் பால் சாப்பிடவும்.இது போல் 40 -தினங்கள் தொடர்ந்து உண்டு வரவும்.

மேலும் காலையில் வெறும் வயிற்றில் வெண்ணை ஒரு எலுமிச்சை அளவு உண்ணவும்.இதுவும் 40 -நாள் தொடர்ந்து உண்ணவும்.  


தேறாத பிள்ளையையும் தேற்றி வைக்குமாம் 
தேற்றான் கொட்டை லேகியம்.


இதுவும் ஒரு மருத்துவ பழமொழிதான்.அதாவது உடல் இளைத்து மெலிந்து இருக்கும் இளம் வயது பிள்ளைகளை உடல் பருக்க இந்த "தேற்றான் கொட்டை லேகியம்" உதவும்.சாப்பிடும் உணவுகளின் சத்துக்களை முழுமையாய் உடலில் சேர்க்க இந்த லேகியம் உதவும்.

சித்தா மெடிக்கல் கடைகளில் இந்த லேகியம் கிடைக்கும்.வாங்கி தினமும் காலை, இரவு உணவிற்குப் பின் ஒரு டீஸ்பூன் உண்டு ஒரு தம்ளர் பால் சாப்பிடவும்.

இதில் கூறப்பட்டுள்ள மூன்று முறைகளையும் கடை பிடித்து வாருங்கள். மூன்று மாதங்களில் உடல் பருமனாக காணலாம்.

நன்றி !
Dr.அரவின் தீபன்...
சித்த மருத்துவம் கேள்வி பதில் குழு - face book 
http://siththamaruththuvavilakkam.blogspot.in

  



திங்கள், 18 பிப்ரவரி, 2013

மலச்சிக்கல் மருந்து -constipation

மலச்சிக்கல் தீர எளிய வழிகள்




மலச்சிக்கல் தீர எளிய வழிகள் !
மலசிக்கல் பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு சொல்லுங்களேன் நான் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறேன் . அதே  போல் நான் உடம்பு உள்  சூட்டினால் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறேன் இதற்கும் எனக்கு தீர்வு சொல்லுங்களேன். என்னுடைய ரொம்ப நாள் பிரச்சனையை தீர்த்து வையுங்கள் . உங்களுக்கு என்றும் கடமை பட்டவனாக இருப்பேன்//

மேற்கண்ட கேள்விக்கான பதில் :-

மலச்சிக்கல் தீர எளிய வழிகள் !

1-வாரம் ஒரு முறை எண்ணை தேய்த்து தலை முழுகுதல்.இது உடலில் உள் சூட்டை தணிக்கும்.மேலும் கண் பார்வை தெளிவாகும்.மூலாதார சூட்டையும் தணிக்கும்.

2 -தினமும் உணவில் ஏதாவது ஒரு கீரை வகையை  சேர்க்கவும்.மேலும் தண்ணீர் நிறைய குடியுங்கள்.

3 -தினமும் பச்சை காய்கறிகள்,பழங்கள் ஏதாவது ஒன்றை உணவாக சேர்த்து வரவும். இதில் நார்ச்சத்து மிகுந்துள்ளது.

4 -இரவு உணவாக பாஸ்ட் புட் மற்றும் புரோட்டா போன்றவைகளை தவிர்த்து ஆவியில் வேகும் உணவான இட்லி,புட்டு,இடிஆப்பம் போன்றவைகளை உண்ணவும்.
இதனுடன் வாழைப்பழம் ஒன்றிரண்டு சாப்பிடலாம். 

மேற்கண்ட முறைகளை கடை பிடித்து வந்தால் மிக எளிதாக மலச்சிக்கல் பிரச்சினை தீரும்.உடலின் உள் சூடும் தணியும்.

சித்த மருந்துகளில் மலச்சிக்கலுக்கு மருந்து :     
1- கடுக்காய் -       விதை நீக்கி சதைப்பகுதி மட்டும்.
2 -நெல்லிக்காய் -விதை நீக்கி சதைப்பகுதி மட்டும்.
3 -தான்றிக்காய் - விதை நீக்கி சதைப்பகுதி மட்டும்.
இவைகள் மூன்றையும் ஒரே எடை அளவு எடுத்து இடித்து ஒன்று சேர்த்துக்கொள்ளவும்.

இதுவே "திரிபலா சூரணம்"எனப்படும்.இதனை இரவில் படுக்கும் போது அரை டீஸ்பூன் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து குடிக்கவும்.

இதனால் காலையில் மலம் இலகுவாக வெளியேறும்.வாத,பித்த,கப நாடிகள் சமநிலைப்படும்.உடலில் நோயெதிர்ப்பு சக்தி பெருகும்,இரத்தம் விருத்தியாகும்.

நன்றி !
Dr.அரவின் தீபன்...
சித்த மருத்துவம் கேள்வி பதில் குழு -face book 









சனி, 16 பிப்ரவரி, 2013

மூட்டுவலி -moottu vali

மூட்டுவலி





பொதுவாக மூட்டுவலி ஏற்பட பல காரணங்கள் உள்ளன.
அதில் மலச்சிக்கல் மற்றும் வாய்வு பிரச்சனை ஒரு காரணமாக உள்ளது.

இதனைக் குணப்படுத்தும் மருந்துகள் சித்த மருத்துவ 
முறையினில் ஏராளமாக உள்ளது.

மருந்துகள் :
1 -முடக்கத்தான் கீரை இலை -2 கைபிடி அளவு எடுத்து இதனுடன் பூண்டு -2 பல்,மிளகு ,சீரகம் சிறிது,தக்காளி 
ஒன்று,தண்ணீர் -2-டம்ளர் சேர்த்து கொதிக்க வைத்து 
சூப் செய்து சாப்பிடவும்.
  இது போல் வாரம் மூன்று முறை சாப்பிட்டு வர ஆரம்ப நிலையில் உள்ள மூட்டு வலி எளிதில் குணமாகும்.

2 -வாயு சூரணம் :
    சுக்கு   -50 -கிராம் 
    மிளகு -50 -கிராம் 
    திப்பிலி -50 -கிராம் 
    சீரகம் -50 -கிராம் 
    ஏல அரிசி -25-கிராம்
இவைகளை லேசாக வறுத்து இடித்து பொடி செய்து 
கொள்ளவும்.
இதில் காலை, மாலை -உணவிற்கு முன் கால் டீஸ்பூன் அளவு எடுத்து வாயிலிட்டு வெந்நீர் சாப்பிடவும்.
    உடலில் சகல வாயுப் பிரச்சனைகளும் தீரும்.பசி 
நன்கு எடுக்கும்.மூட்டு வலி ,குதிக்கால் வலி தீரும்.

இதற்கு மேற் பிரயோகமாக முந்தய பதிவில் குறிப்பிட்ட 
"வாத நாராயணன் தைலம்"செய்து தடவலாம்.  

நன்றி !
Dr.அரவின் தீபன்...
சித்த மருத்துவம் கேள்வி பதில் குழு (face book)